என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெண் ஊழியர் கொலையில் தொழில் அதிபர்-மனைவி தலைமறைவு: தனிப்படைகள் தேடுதல் வேட்டை
Byமாலை மலர்3 Jun 2022 10:10 AM GMT (Updated: 3 Jun 2022 10:10 AM GMT)
பெண் ஊழியர் கொலை தொடர்பாக தொழில் அதிபர் நவநீதன் மற்றும் அவரது மனைவி அகிலா ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோவை:
ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்தவர் 37 வயது பெண். இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்தார்.
அந்த பெண் ஈரோட்டில் உள்ள டைல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். டைல்ஸ் நிறுவனத்தை கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் நவநீதன் (வயது 50) என்பவர் நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண் ஈரோட்டில் இருந்து கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நவநீதன் வீட்டுக்கு வந்தார். அதன்பிறகு உடல் கருகிய நிலையில் அந்த பெண் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக தொழில் அதிபர் தரப்பில் அந்த பெண், சிகிச்சைக்காக தன்னிடம் பணம் கேட்டு வந்ததாகவும், பணம் கொடுக்க மறுத்ததால் தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்ததாகவும் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அந்த பெண்ணை சந்தித்து வாக்குமூலம் பெற்றனர். அப்போது அந்த பெண் திடுக்கிடும் பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.
கணவரை பிரிந்து வாழ்ந்த என்னுடன் தொழில் அதிபர் நவநீதன் நெருங்கி பழகினார். எனக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் நான் கர்ப்பம் அடைந்தேன். உடனே நவநீதன் கர்ப்பத்தை கலைக்கும்படி கூறினார். நானும் கர்ப்பத்தை கலைத்தேன். இப்படியே 6 முறை நான் கர்ப்பமாகி கருவை கலைத்துள்ளேன். இதில் நான் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டேன். இந்த விவரங்கள் அவரது மனைவி அகிலாவுக்கும் தெரியும்.
உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நான் மருத்துவ செலவுக்கு பணம் கேட்டு நவநீதன் வீட்டுக்கு சென்றேன். அங்கு குளியல் அறைக்கு அழைத்துச் சென்று நவநீதனும், அவரது மனைவியும் சேர்ந்து என் மீது மண்எண்ணெயை ஊற்றி தீவைத்தனர். இதில் நான் படுகாயம் அடைந்தேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருந்தார்.
இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஊழியர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் தற்கொலைக்கு முயன்றதாக பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை, பெண்ணின் வாக்குமூலத்தின் பேரில் கொலை வழக்காக ஆர்.எஸ்.புரம் போலீசார் பதிவு செய்தனர். நவநீதன் மற்றும் அவரது மனைவி அகிலா ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடிச் சென்றபோது அவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் 2 பேரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் 2 பேரையும் பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்தவர் 37 வயது பெண். இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்தார்.
அந்த பெண் ஈரோட்டில் உள்ள டைல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். டைல்ஸ் நிறுவனத்தை கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் நவநீதன் (வயது 50) என்பவர் நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண் ஈரோட்டில் இருந்து கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நவநீதன் வீட்டுக்கு வந்தார். அதன்பிறகு உடல் கருகிய நிலையில் அந்த பெண் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக தொழில் அதிபர் தரப்பில் அந்த பெண், சிகிச்சைக்காக தன்னிடம் பணம் கேட்டு வந்ததாகவும், பணம் கொடுக்க மறுத்ததால் தான் கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்ததாகவும் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அந்த பெண்ணை சந்தித்து வாக்குமூலம் பெற்றனர். அப்போது அந்த பெண் திடுக்கிடும் பல்வேறு தகவல்களை தெரிவித்தார்.
கணவரை பிரிந்து வாழ்ந்த என்னுடன் தொழில் அதிபர் நவநீதன் நெருங்கி பழகினார். எனக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் நான் கர்ப்பம் அடைந்தேன். உடனே நவநீதன் கர்ப்பத்தை கலைக்கும்படி கூறினார். நானும் கர்ப்பத்தை கலைத்தேன். இப்படியே 6 முறை நான் கர்ப்பமாகி கருவை கலைத்துள்ளேன். இதில் நான் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டேன். இந்த விவரங்கள் அவரது மனைவி அகிலாவுக்கும் தெரியும்.
உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நான் மருத்துவ செலவுக்கு பணம் கேட்டு நவநீதன் வீட்டுக்கு சென்றேன். அங்கு குளியல் அறைக்கு அழைத்துச் சென்று நவநீதனும், அவரது மனைவியும் சேர்ந்து என் மீது மண்எண்ணெயை ஊற்றி தீவைத்தனர். இதில் நான் படுகாயம் அடைந்தேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருந்தார்.
இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஊழியர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் தற்கொலைக்கு முயன்றதாக பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை, பெண்ணின் வாக்குமூலத்தின் பேரில் கொலை வழக்காக ஆர்.எஸ்.புரம் போலீசார் பதிவு செய்தனர். நவநீதன் மற்றும் அவரது மனைவி அகிலா ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடிச் சென்றபோது அவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் 2 பேரையும் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் 2 பேரையும் பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X