என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பா.ஜ.க.வினர் மறியல் போராட்டம்
Byமாலை மலர்2 Jun 2022 9:55 AM GMT (Updated: 2 Jun 2022 9:55 AM GMT)
தேவகோட்டையில் பா.ஜ.க.வினர் மறியல் போராட்டம் நடத்தினர்.
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தி.மு.க. அரசை கண்டித்தும், மாநில தலைவர் அண்ணாமலை பேரணியை தடுத்ததை கண்டித்தும் பா.ஜ.க.வினர் மறியல் போராட்டம் நடத்தினர். நகரத்தலைவர் ரிஷிபாலகிருஷ்ணன், தேவகோட்டை ஒன்றிய தலைவர் ஏலப்பன், கண்ணங்குடி ஒன்றிய தலைவர் ஆனந்த் ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாவட்ட செயலாளர் லட்சுமி, மாவட்ட மகளிர் அணி தலைவி கோமதி நாச்சியார் முன்னிலை வகித்தனர். தேவகோட்டை பஸ் நிலையத்தில் மறியல் செய்யப்பட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னதாக தியாகிகள் பூங்காவில் இருந்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு பஸ் நிலையம் வாசலில் அமர்ந்து பஸ் மறியல் செய்தனர்.
இதில் இறகுசேரி காசிராஜா, புதுகுறிச்சி ராமலிங்கம், இருமதி முத்துராமலிங்கம், ஆசைத்தம்பி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களை நகர் காவல் ஆய்வாளர் சரவணன் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X