என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தென்காசி மாவட்டத்தில் விவசாயி, தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்1 Jun 2022 9:28 AM GMT (Updated: 1 Jun 2022 9:28 AM GMT)
தென்காசி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் விவசாயி, தொழிலாளி தற்கொலை செய்து கொண்டனர்.
தென்காசி :
ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையை அடுத்த குறிஞ்சான்பட்டி வேதகோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணிய பாண்டியன்(53). விவசாயி.
சம்பவத்தன்று இவர் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவரது மனைவி சசிகலா(48), சற்று தாமதமாக சாப்பாடு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த சுப்பிரமணிய பாண்டியன் சாப்பிடாமல் வீட்டுக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.
இதற்கிடையே சசிகலா, வீட்டுக்கு செல்லாமல் மாலை வரை தோட்டத்தில் வேலை பார்த்துவிட்டு அதன்பின்னர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு சுப்பிரமணிய பாண்டியன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
உடனே அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது தொடர்பாக ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசுதேவநல்லூர் அருகே உள்ள வெள்ளானகோட்டையை சேர்ந்தவர் முருகன்(34). இவர் வைக்கோல் லோடு ஏற்றும் வேலைக்கு சென்று வந்தார்.
கடந்த சில நாட்களாக வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு பணம் கொடுக்க வில்லை என்று கூறி அவரது மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த முருகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலையை அடுத்த குறிஞ்சான்பட்டி வேதகோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணிய பாண்டியன்(53). விவசாயி.
சம்பவத்தன்று இவர் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவரது மனைவி சசிகலா(48), சற்று தாமதமாக சாப்பாடு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த சுப்பிரமணிய பாண்டியன் சாப்பிடாமல் வீட்டுக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.
இதற்கிடையே சசிகலா, வீட்டுக்கு செல்லாமல் மாலை வரை தோட்டத்தில் வேலை பார்த்துவிட்டு அதன்பின்னர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு சுப்பிரமணிய பாண்டியன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
உடனே அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது தொடர்பாக ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசுதேவநல்லூர் அருகே உள்ள வெள்ளானகோட்டையை சேர்ந்தவர் முருகன்(34). இவர் வைக்கோல் லோடு ஏற்றும் வேலைக்கு சென்று வந்தார்.
கடந்த சில நாட்களாக வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு பணம் கொடுக்க வில்லை என்று கூறி அவரது மனைவி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த முருகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X