search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    பி.எம்.கிசான் திட்ட பயனாளிகள் கே.ஒய்.சி. பதிவேற்ற அறிவுறுத்தல்

    பிரதம மந்திரி கவுரவ நிதித் திட்டத்தில் பி.எம்.கிசான் திட்ட பயனாளிகள் கே.ஒய்.சி. பதிவேற்ற செய்வது அவசியமாகிறது.
    மேட்டூர்:

    பிரதம மந்திரி கவுரவ நிதித் திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு 11-வது தவணைத் தொகை ெபறுவதற்கு விவசாயிகள் தங்களது ஆதார் விபரங்களை பதிவேற்றம் செய்வது அவசியமாகிறது.

     ஆதார் எண்ணுடன் தொலைபேசி எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பி.எம்.கிசான் வலைதளத்தில் கைரேகையினை பதிவு செய்து வரும் ஓ.டி.பி. எண்ணை வலைதளத்தில் உள்ளீடு செய்து பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். 

    தொலைபேசி எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்காத விவசாயிகள் அருகிலுள்ள இ-சேவை மையத்தின் மூலம் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று மேச்சேரி வேளாண்மை உதவி இயக்குநர் சுஜாதா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×