என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஸ்ரீபெரும்புதூரில் பஸ்படிக்கட்டில் தொங்கியதை கண்டித்த டிரைவர்கண்டக்டர் மீது பள்ளி மாணவர்கள் தாக்குதல்
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. இங்கு ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்று வட்டார மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையதில் இருந்து ஆயகொளத்தூர், திருவள்ளூர், சுங்குவார் சத்திரம், மணிமங்கலம், படப்பை உள்ளிட்ட இடங்களுக்கு மாணவ, மாணவிகள் பஸ்சில் சென்று வருகின்றனர். இந்தநிலையில் வழக்கம் போல் ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையத்தில் இருந்து தொடுகாடு, செங்காடு வழியாக திருவள்ளூர் நோக்கி அரசு பஸ் சென்றது. அதில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயணம் செய்தனர்.
அப்போது பள்ளி மாணவர்கள் பலர் பஸ் படியில் தொங்கியபடி வந்தனர். இதை பஸ் டிரைவர் சேது, கண்டக்டர் அமிர்தலிங்கம் ஆகியோர் கண்டித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் டிரைவர், கண்டக்டரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே ஆயகொளத்தூர் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றதும் படியில் தொங்கிய படி பயணம் செய்த மாணவர்கள் சிலர் கோபத்தில் டிரைவர் சேது, கண்டக்டர் அமிர்தலிங்கம் ஆகிய இருவரையும் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை தேடி வருகிறார்.






