என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காதலிக்க மறுத்ததால் ஆசிட் வீசுவேன்- தருமபுரி மாணவிக்கு மிரட்டல் வாலிபர் மீது போக்சோ பாய்ந்தது
Byமாலை மலர்27 April 2022 6:12 AM GMT (Updated: 27 April 2022 6:12 AM GMT)
தருமபுரி அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை ஆசிட் அடித்து விடுவேன் என மிரட்டல் வாலிபர் மீது போக்கோவில் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே சிவாடி பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
வழக்கம் போல் நேற்று கல்லூரி செல்வதற்காக கெங்கலாபுரம் பஸ் நிறுத்தத்திற்கு வந்தார். கல்லூரி பஸ் வந்ததுடன் அதில் ஏற முயன்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த சிவாடி பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் சஞ்சய் (25) என்பவர் மாணவியின் துப்பட்டாவை பிடித்து கீழே இழுத்து சாலையில் தள்ளிய அவர் தன்னை காலிக்க வேண்டும் என வற்புறுத்தினார்.
மேலும் காதலிக்க மறுத்ததால் எந்த நேரத்திலும் ஆசிட் அடித்து விடுவேன் என்றும், பாலியல் பலாத்காரம் செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.
வாலிபரின் மிரட்டலுக்கு பயந்து மாணவி இது குறித்து தருமபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.
இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் தருமபுரி அனைத்து மகளிர் போலீசார் போக்கோ பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து வாலிபர் சஞ்சயை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X