என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
போதையில் பைக் ஓட்டிய போலீஸ்காரர்- உயர் அதிகாரிகள் விசாரணை
Byமாலை மலர்16 April 2022 8:18 AM GMT (Updated: 16 April 2022 8:18 AM GMT)
குடி போதையில் தள்ளாடிய படி பைக் ஓட்டிய போலீஸ்காரரிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிபவர் முத்தமிழ் (வயது 28), இவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு ஹெல்மட் அணியாமல் பிரபாத்தில் இருந்து ஜவுளிக்கடை பஸ்டாப் வரை பைக்கை தாறு மாறாக ஓட்டி சென்றார்.
அப்போது ஒரு தம்பதி உள்பட 4 பேரை இடித்து தள்ளினார். இதற்கிடையே குகை பஸ் டாப்பில் பைக்கை நிறுத்தி விட்டு வாகன ஓட்டிகள் , பொது மக்களிடம் தகராறில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்த செவ்வாய்ப்பேட்டை போலீசார் முத்தமிழை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். ஆனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் முத்தமிழ் போதையில் வாகனம் ஓட்டியது , மக்களிடம் தகராறில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவம் குறித்த உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X