என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நாமக்கல்லில் மாநில வில்வித்தை போட்டி
Byமாலை மலர்7 April 2022 6:19 AM GMT (Updated: 7 April 2022 6:19 AM GMT)
நாமக்கல்லில் மாநில அளவிலான வில்வித்தை தேர்வு போட்டி நடந்தது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அரசு விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கான மாநில அளவிலான வில்வித்தை தேர்வு போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) சிவரஞ்சன் தொடங்கி வைத்தார்.
14 வயது மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கு இண்டியன், ரீக்கோ பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 18 வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் எடுத்த புள்ளிகள் விவரம் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
புள்ளிகளின் அடிப்படையில் அரசு விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், பயிற்சியாளர்கள் கேசவன், கண்ணன் ஆகியோர் நடத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X