search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    சேலம் மாவட்டத்தில் 20.69 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

    சேலம் மாவட்டத்தில் இதுவரை 20.69 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில்  கடந்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.மாவட்டத்தில் 27.56லட்சம் பேருக்கு முதல் தவணையும், 20.69 லட்சம் பேருக்கு 2-வது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

    இதனிடையே, நேற்று  27-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. இதற்காக மாவட்டம் முழுவதும் 1,070 தடுப்பூசி மையங்கள்
    அமைக்கப்பட்டு, 18,500 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். 

    காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த முகாமில்
    26,813 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சேலம் சுகாதார மாவட்டத்தில்18,032 பேரும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 7,183 பேரும் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் 1,598 பேரும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
    Next Story
    ×