என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வீணடிக்கப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
Byமாலை மலர்29 March 2022 3:51 AM GMT (Updated: 29 March 2022 3:51 AM GMT)
கோயம்பேடு வணிக வளாகத்தில் காய்கறிகள் வீணாக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் குளிர்சாதன கிடங்கு அமைத்துத் தர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த ஒரு வாரகாலமாக ஐந்து டன் எடை கொண்ட நல்ல காய்கறிகள் கோயம்பேடு சந்தை வளாகத்திலுள்ள திறந்த வெளியில் கொட்டி கிடப்பதாகவும், இதற்குக் காரணம் கூடுதல் வரத்து மற்றும் குளிர்சாதன வசதி இல்லாதது என்றும், தற்போதுள்ள உணவுப் பொருள் கிடங்கினை குளிர்சாதன வசதி கொண்ட கிடங்காக மாற்றுவது குறித்து அரசாங்கத்தினை அணுகி இருப்பதாகவும், 30 டன் திறன் கொண்ட காய்கறி கழிவிலிருந்து மின் சாரம் தயாரிக்கும் ஆலையை உயிர்பிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளன.
இதுகுறித்து அங்கீகரிக்கப்பட்ட கோயம்பேடு சந்தை வியாபாரிகள் சங்கத்தைக் கேட்டபோது, ஒரு நாளைக்கு 50 லாரிகளில் கூடுதலாக காய்கறிகள் வருவதாகவும், அவை அனைத்தையும் விற்பனை செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த கோயம்பேடு சிறு வியாபாரிகள் நலச்சங்கம், காய்கறிகளின் விலை உயர்ந்தால், காய்கறிகளை வியாபாரிகளிடமிருந்து வாங்கி அவற்றை குறைந்த விலையில் நுகர்வோருக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுப்பதாகவும், இதேபோன்று விலை குறையும் போதும் காய்கறிகளை வியாபாரிகளிடமிருந்து வாங்குவதற்கான திட்டத்தை அரசு வகுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
இதுகுறித்து சந்தை மேலாண்மைக்குழு அதிகாரியிடம் கேட்டபோது, நல்ல தரமான காய்கறிகள் குப்பை போல் கொட்டப்படுவது நன்கு தெரியும் என்றும், இதுபோன்ற தருணத்தில் காய்கறிகளை அனாதை மற்றும் முதியோர் இல்லங்களுக்கு தருவதற்கான ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும், விலை குறைந்த தன் காரணமாக காய்கறிகள் வீணடிக்கப்படுவதில்லை என்றும், சில வியாபாரிகள் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதாகவும், வீணடிப்பு பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை என்றும் தெரிவித்து இருக்கிறார்.
நல்ல தரமான காய்கறிகள் யாருக்கும் பயனில்லாமல் வீணடிக்கப்படுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இதுபோன்ற காய்கறிகளை சேமித்துக் கொள்ள ஏதுவாக குளிர்சாதனகிடங்கு ஒன்றினை கோயம்பேடு வணிக வளாகத்திற்குள் ஏற்படுத்த வேண்டும்.
அதிகவரத்து காரணமாக குறைந்த விலையில் காய் கறிகள் கிடைக்கும்போது அதனை அரசே கொள்முதல் செய்து சென்னையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்று மக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டுமென்ற எதிர்பார்ப்பு காய்கறி மொத்த விற்பனையாளர்களிடையேயும், சிறு விற்பனையாளர்களிடையேயும், நுகர்வோர்களிடையேயும் தற்போது உள்ளது. இதுபோன்ற அரசின் நடவடிக்கை அனைவருக்கும் பயனளிப்பதாக அமையும்.
எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, கோயம்பேடு வணிக வளாகத்தில் காய்கறிகள் வீணாக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் குளிர்சாதன கிடங்கு அமைத்துத் தரவும், காய்கறிகளை குறைந்த விலையில் மக்களிடையே சேர்க்கவும், வியாபாரிகளுக்கு லாபம் ஏற்படுவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அ.தி.மு.க.வின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த ஒரு வாரகாலமாக ஐந்து டன் எடை கொண்ட நல்ல காய்கறிகள் கோயம்பேடு சந்தை வளாகத்திலுள்ள திறந்த வெளியில் கொட்டி கிடப்பதாகவும், இதற்குக் காரணம் கூடுதல் வரத்து மற்றும் குளிர்சாதன வசதி இல்லாதது என்றும், தற்போதுள்ள உணவுப் பொருள் கிடங்கினை குளிர்சாதன வசதி கொண்ட கிடங்காக மாற்றுவது குறித்து அரசாங்கத்தினை அணுகி இருப்பதாகவும், 30 டன் திறன் கொண்ட காய்கறி கழிவிலிருந்து மின் சாரம் தயாரிக்கும் ஆலையை உயிர்பிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளன.
இதுகுறித்து அங்கீகரிக்கப்பட்ட கோயம்பேடு சந்தை வியாபாரிகள் சங்கத்தைக் கேட்டபோது, ஒரு நாளைக்கு 50 லாரிகளில் கூடுதலாக காய்கறிகள் வருவதாகவும், அவை அனைத்தையும் விற்பனை செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த கோயம்பேடு சிறு வியாபாரிகள் நலச்சங்கம், காய்கறிகளின் விலை உயர்ந்தால், காய்கறிகளை வியாபாரிகளிடமிருந்து வாங்கி அவற்றை குறைந்த விலையில் நுகர்வோருக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுப்பதாகவும், இதேபோன்று விலை குறையும் போதும் காய்கறிகளை வியாபாரிகளிடமிருந்து வாங்குவதற்கான திட்டத்தை அரசு வகுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
இதுகுறித்து சந்தை மேலாண்மைக்குழு அதிகாரியிடம் கேட்டபோது, நல்ல தரமான காய்கறிகள் குப்பை போல் கொட்டப்படுவது நன்கு தெரியும் என்றும், இதுபோன்ற தருணத்தில் காய்கறிகளை அனாதை மற்றும் முதியோர் இல்லங்களுக்கு தருவதற்கான ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும், விலை குறைந்த தன் காரணமாக காய்கறிகள் வீணடிக்கப்படுவதில்லை என்றும், சில வியாபாரிகள் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதாகவும், வீணடிப்பு பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை என்றும் தெரிவித்து இருக்கிறார்.
நல்ல தரமான காய்கறிகள் யாருக்கும் பயனில்லாமல் வீணடிக்கப்படுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இதுபோன்ற காய்கறிகளை சேமித்துக் கொள்ள ஏதுவாக குளிர்சாதனகிடங்கு ஒன்றினை கோயம்பேடு வணிக வளாகத்திற்குள் ஏற்படுத்த வேண்டும்.
அதிகவரத்து காரணமாக குறைந்த விலையில் காய் கறிகள் கிடைக்கும்போது அதனை அரசே கொள்முதல் செய்து சென்னையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்று மக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டுமென்ற எதிர்பார்ப்பு காய்கறி மொத்த விற்பனையாளர்களிடையேயும், சிறு விற்பனையாளர்களிடையேயும், நுகர்வோர்களிடையேயும் தற்போது உள்ளது. இதுபோன்ற அரசின் நடவடிக்கை அனைவருக்கும் பயனளிப்பதாக அமையும்.
எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, கோயம்பேடு வணிக வளாகத்தில் காய்கறிகள் வீணாக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் குளிர்சாதன கிடங்கு அமைத்துத் தரவும், காய்கறிகளை குறைந்த விலையில் மக்களிடையே சேர்க்கவும், வியாபாரிகளுக்கு லாபம் ஏற்படுவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அ.தி.மு.க.வின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்...டெல்லியில் கட்டப்பட்டுள்ள அண்ணா-கலைஞர் அறிவாலயத்தின் சுவாரசிய தகவல்கள்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X