என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை - டிஜிபி எச்சரிக்கை
Byமாலை மலர்1 March 2022 11:12 PM GMT (Updated: 1 March 2022 11:12 PM GMT)
அரசு வேலை வாங்கித் தருவதாக சிலர் பொய்யான தகவல்களை பரப்பி பலரிடம் இருந்து பணத்தை வாங்கி ஏமாற்றுகின்றனர்.
சென்னை:
சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகளை பரப்புவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகவும், இதனை மக்கள் உண்மை என நம்பி ஏமாறுவதாகவும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை புத்தக கண்காட்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் பேசுகையில்:
அரசு வேலை வாங்கித் தருவதாக சிலர் பொய்யான தகவல்களை பரப்பி பலரிடம் இருந்து பணத்தை வாங்கி ஏமாற்றுகின்றனர். இதனால் உண்மையை உணராத மக்கள் ஏமாற்றமடைகின்றனர்.
நாம் கேட்கக்கூடிய செய்திகள் மற்றும் பார்க்கக்கூடிய பார்வைகளில் எது உண்மை என்று அறிந்த கொள்ள நிறைய புத்தகங்களை படிக்க வேண்டும். அப்போதுதான் தெளிவான முடிவுகள் எடுக்க முடியும்.
குறிப்பிட்ட கொள்கைகளில் தீவிரமாக ஈடுபடுவோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டோர், சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர்.
அவர்களை கண்டறிந்து காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X