search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    ஆட்டையாம்பட்டி பேரூராட்சியில் 4-வது முறையாக சேர்மன் பதவியை தி.மு.க. கைப்பற்றுகிறது

    சேலம் மாவட்டத்தில் ஆட்டையாம்பட்டி பேரூராட்சியில் 4-வது முறையாக சேர்மன் பதவியை தி.மு.க. கைப்பற்றுகிறது.
    ஆட்டையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆட்டையாம்பட்டி பேரூராட்சி தேர்தலில் தி.மு.க. அபார வெற்றி பெற்று 4-வது முறையாக சேர்மன் பதவியை கைப்பற்றுகிறது. 

    கடந்த 3 முறையாக ஆட்டையாம்பட்டி சேர்மன் பதவியை பேரூர் தி.மு.க. செயலாளர் முருகபிரகாஷ் வகித்து வந்தார். 

    தற்போது ஆட்டையாம்பட்டி பேரூராட்சி தேர்தலில் 8-வது வார்டு கவுன்சிலராக அவர் வெற்றி பெற்றுள்ளார். 4-வது முறையாக பேரூராட்சி சேர்மன் பதவிக்கு முருகபிரகாஷ் தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.

    ஆட்டையாம்பட்டி பேரூராட்சி 15 வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் அவர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வார்டு வாரியாக வருமாறு:-

    1.பாஸ்கர்(தி.மு.க.)-482, 2.சாந்தி(தி.மு.க.)-515, 3.தேன்மொழி(தி.மு.க.)-550, 4.கிருஷ்ணவேணி (தி.மு.க.)- 448, 5.தாமரைச்செல்வி (தி.மு.க.)-453, 6. அருண்குமார்(தி.மு.க.)-412, 7. சரசு(தி.மு.க.)-391, 8.முருகபிரகாஷ் (தி.மு.க.)-311, 9.மணிமாலா(அ.தி.மு.க.)-334, 10. சக்திவேல்(தி.மு.க.)-368, 11. கோமதி(தி.மு.க.)-413, 12. முருகன்(தி.மு.க.)-495, 13. பிரியா(தி.மு.க.)-390, 14. ரத்தினவேல்(சுயே)-339, 15. ரமேஷ்(தி.மு.க.)-390

    இந்த தகவலை தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்டையாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலருமான குணாளன் தெரிவித்தார்
    Next Story
    ×