என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தி.மு.க.வில் மேலும் 18 போட்டி வேட்பாளர்கள் நீக்கம்- கட்சித் தலைமை நடவடிக்கை
Byமாலை மலர்16 Feb 2022 6:10 AM GMT (Updated: 16 Feb 2022 6:10 AM GMT)
கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பில் இருந்தும் 18 பேரை தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகாரப்பூர்வ தி.மு.க. வேட்பாளர்களை எதிர்த்து போட்டி வேட்பாளர்களாக நிற்கும் மேலும் 18 தி.மு.க.வினரை கட்சி மேலிடம் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுபற்றி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், கழக வேட்பாளர்களை எதிர்த்தும் - தோழமைக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்தும் போட்டியிட்ட காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, பீர்க்கன்கரணை பேரூர் கழகம், 1-வது வட்டத்தைச் சேர்ந்த ரா.ஹேமாவதிக்கு உறுதுணையாக இருக்கும் பேரூர் துணைச் செயலாளர் அ.கதிரவன், 1-வது வார்டு செயலாளர் ஏ.சேகர்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், குளச்சல் நகராட்சி, 24-வது வார்டு கிளைச் செயலாளர் குறைசா பீவி, நாகர்கோவில் மாநகராட்சி, 11-வது வார்டைச் சேர்ந்த 7-வது வார்டு கிளைச் செயலாளர் முத்துசெல்வி மற்றும் கனக ரூபி ஜான், 30-வது வார்டைச் சேர்ந்த வட்ட பிரதிநிதிகள் பிரசாத், சகாயகுமார். 32-வது வார்டைச் சேர்ந்த வட்ட முன்னாள் பிரதிநிதி அனிஷா ஜேம்ஸ்ராஜன், முன்னாள் கவுன்சிலர் கில்டா பீட்டர், நித்யாகுமாரி, 34-வது வார்டைச் சேர்ந்த வட்ட பிரதிநிதி வால்டர் கென்னடி, 46-வது வார்டைச் சேர்ந்த வட்டச் செயலாளர் மாறின், 26வது வட்டத்தைச் சேர்ந்த வட்ட இளைஞர் அணி அமைப்பாளர் செந்தில் குமார், 1-வது வார்டைச் சேர்ந்த ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் இளம் பிறை ஷேக்.
சென்னை தெற்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் அ.ராஜேந்திரன் - மதுரவாயல் தெற்கு பகுதி, 152-வது வட்டத்தைச் சேர்ந்த வளசரவாக்கம் நகர முன்னாள் செயலாளர் அ.ஜெயசீலன் - சோழிங்கநல்லூர் மத்திய பகுதி பொருளாளர் சி.ரங்கன் 189-வது வட்ட பிரதிநிதி ஆர்.கன்னியப்பன் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகாரப்பூர்வ தி.மு.க. வேட்பாளர்களை எதிர்த்து போட்டி வேட்பாளர்களாக நிற்கும் மேலும் 18 தி.மு.க.வினரை கட்சி மேலிடம் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுபற்றி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில், கழக வேட்பாளர்களை எதிர்த்தும் - தோழமைக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்தும் போட்டியிட்ட காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, பீர்க்கன்கரணை பேரூர் கழகம், 1-வது வட்டத்தைச் சேர்ந்த ரா.ஹேமாவதிக்கு உறுதுணையாக இருக்கும் பேரூர் துணைச் செயலாளர் அ.கதிரவன், 1-வது வார்டு செயலாளர் ஏ.சேகர்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், குளச்சல் நகராட்சி, 24-வது வார்டு கிளைச் செயலாளர் குறைசா பீவி, நாகர்கோவில் மாநகராட்சி, 11-வது வார்டைச் சேர்ந்த 7-வது வார்டு கிளைச் செயலாளர் முத்துசெல்வி மற்றும் கனக ரூபி ஜான், 30-வது வார்டைச் சேர்ந்த வட்ட பிரதிநிதிகள் பிரசாத், சகாயகுமார். 32-வது வார்டைச் சேர்ந்த வட்ட முன்னாள் பிரதிநிதி அனிஷா ஜேம்ஸ்ராஜன், முன்னாள் கவுன்சிலர் கில்டா பீட்டர், நித்யாகுமாரி, 34-வது வார்டைச் சேர்ந்த வட்ட பிரதிநிதி வால்டர் கென்னடி, 46-வது வார்டைச் சேர்ந்த வட்டச் செயலாளர் மாறின், 26வது வட்டத்தைச் சேர்ந்த வட்ட இளைஞர் அணி அமைப்பாளர் செந்தில் குமார், 1-வது வார்டைச் சேர்ந்த ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் இளம் பிறை ஷேக்.
சென்னை தெற்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் அ.ராஜேந்திரன் - மதுரவாயல் தெற்கு பகுதி, 152-வது வட்டத்தைச் சேர்ந்த வளசரவாக்கம் நகர முன்னாள் செயலாளர் அ.ஜெயசீலன் - சோழிங்கநல்லூர் மத்திய பகுதி பொருளாளர் சி.ரங்கன் 189-வது வட்ட பிரதிநிதி ஆர்.கன்னியப்பன் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... சமூக வலைதளத்தை கலக்கும் கூலி தொழிலாளியின் ருசிகர பேட்டி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X