என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சாம்பவர்வடகரையில் 3 டன் ரேசன் அரிசி பறிமுதல்-மில் உரிமையாளர் கைது
Byமாலை மலர்25 Jan 2022 9:21 AM GMT (Updated: 25 Jan 2022 9:21 AM GMT)
சாம்பவர்வடகரையில் லோடு வேனில் 3 டன் ரேசன் அரிசி கடத்திய மில் உரிமையாளரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சாம்பவர்வடகரை:
சாம்பவர்வடகரை பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக வந்த புகாரின்பேரில் நெல்லை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று இரவு அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.
அவர்களுடன் சாம்பவர் வடகரை சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசாரும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது விந்தன்கோட்டை சாலையில் வந்த மினி லோடு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ரேசன் அரிசியை லோடு வேனுடன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக மினி லோடு வேனை ஓட்டிவந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர், பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாபேரியை சேர்ந்த மனோ ஜெபத்துரை(வயது 30) என்பதும், அந்த பகுதியில் சொந்தமாக ரைஸ்மில் வைத்திருப்பதும் தெரியவந்தது.
அவரை போலீசார் கைது செய்தனர். பிடிப்பட்ட ரேசன் அரிசி எடை 3 டன் ஆகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X