என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கொரோனா குறித்த ஆலோசனைகளை பெற தொலைபேசி எண்கள்
Byமாலை மலர்8 Jan 2022 10:46 AM GMT (Updated: 8 Jan 2022 10:46 AM GMT)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் விதமாக மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட கட்டுப்பாட்டு அறை, பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கட்டுப்பாட்டு அறையை நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் கொரோனா தொடர்புடைய சந்தேகங்கள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளை பெற தொலைப்பேசி எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொடர்பான பொதுமக்களின் புகார்களை கண்காணிக்கும் எண் 044-27237107, 044-27237207, வீட்டில் தனிமைப்படுத்துபவர்களை கண்காணிக்கும் எண் 044-27237784, மருத்துவ ஆலோசனை வழங்கும் எண் 044-27237785, வாட்ஸ் ஆப் எண் 9345440662 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X