என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொரோனா வைரஸ்
ஓசூரில் அதிகரிக்கும் கொரோனா: ஒரே நாளில் 13 பேர் பாதிப்பு
ஓசூர் பகுதியில் தற்போது கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாத இறுதி வரையில் கொரோனா பரவவில்லை. இதனால் கொரோனா இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி இருந்தது. சூளகிரியில் முதலில் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். அதன் பிறகு கொரோனா வேகமாக பரவியது. முதல் அலையில் தினமும் 50 முதல் 60 பேருக்கு பாதிப்பும், தினமும் 2 முதல் 3 பேர் இறப்பு என இருந்தது. இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா 2-வது அலை கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டது. தினமும் 800-க்கும் மேற்பட்டோருக்கு தொற்றும், 30-க்கும் மேற்பட்டவர்கள் இறப்பு என சென்றது.
இந்தநிலையில் ஓசூர் பகுதியில் தற்போது கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஓசூர் பகுதியில் நேற்று ஒரே நாளில் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இது நாளுக்கு நாள் உயர வாய்ப்பு உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. எனவே கொரோனா 3-வது அலை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூரில் இருந்து தொடங்குகிறதோ? என்ற பயம் மக்களை தொற்றி உள்ளது. கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா? கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில் 5 சதவீத மக்கள் மட்டுமே முக கவசம் (மாஸ்க்) அணிந்து செல்கிறார்கள். அனைத்து பகுதிகளிலும் கூட்டம், கூட்டமாக காணப்படுகிறார்கள். எனவே கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story






