என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பேரணாம்பட்டு பகுதியில் பூட்டிய வீடுகளில் கொள்ளை: 3 பேர் கைது
பேரணாம்பட்டு:
பேர்ணாம்பட்டு பகுதியில் கடந்த 6 மாதங்களாக பூட்டிய வீடுகளை ஒரு கும்பல் நோட்டமிட்டு பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளையும் ரொக்கப் பணத்தையும் திருடிச் சென்று கைவரிசை காட்டி வந்தனர்.
பேரணாம்பட்டு பகுதியில் கடந்த ஆகஸ்டு மாதம் சிக்கந்தர், பரிதா பானு, முத்தம்மா, துபாய் லட்சுமி ஆகிய 4 பேர் வீடுகளில் அடுத்தடுத்த நாட்களில் 17 பவுன் தங்க நகைகளும், ரூ.3 லட்சத்து 26 ஆயிரமும் கொள்ளை போனது.
இதனைத் தொடர்ந்து அக்டோபர் 10-ந்தேதி பேர்ணாம்பட்டு சேரன் வீதியில் சாந்தி, ஆனந்தன் ஆகிய வீடுகளில் தங்க நகைகளும், காமராஜர் நகரில் சுந்தரி, அமுதா ஆகியோரது வீடுகளில் 5 பவுன் நகைகளும் பாத்திமா வீட்டில் 3 பட்டுப்புடவைகளும் 3 செல்போன்களும் டிசம்பர் 6-ந்தேதி கொத்தப்பல்லி கிராமத்தில் யுவராஜ் என்பவரது வீட்டில் 8 பவுன் தங்க நகைகளும், ஒரு எல்இடி டிவி, ரூ.13, ஆயிரமும் திருடுபோனது.
இந்த தொடர் திருட்டு சம்பந்தமாக பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட தனித்தனி புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பேரணாம்பட்டு அருகே மசிகம் கிராமத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது சந்தேகப்படும் வகையில் 3 பேர் ஒரு பைக்கில் வந்தனர். முன்னுக்கு பிரணாக கூறியதால் அவர்களை பிடித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள ஒரு உதயேந்திரத்தை சேர்ந்தவர் சுவேல் (வயது 26). பேர்ணாம்பட்டு டவுன் குட்டைப் பகுதியை சேர்ந்த மணி (22) பேரணாம்பட்டு சேரன் வீதியை சேர்ந்த இர்பான் அகமது (22) என்பது தெரியவந்தது.
3 பேரும் சேர்ந்து பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு நகை பணத்தையும் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இதில் சுவேல் மீது மட்டும் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி, ஆலங்காயம் உள்ளிட்ட பகுதிகளில் 14-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன.
கைது செய்யப்பட்டு சிறை சென்று ஜாமீனில் வந்து மீண்டும் தனது கைவரிசையை காட்டி போலீசிடம் சிக்கியுள்ளான்.
திருடிய தங்க நகைகளை கொடுத்து மது பாட்டில்கள் வாங்கி ஜாலியாக ஊர் சுற்றியது தெரியவந்தது. இவர்களிடமிருந்து திருடிய மொத்தம் 10 பவுன் தங்கநகைகள் எல்இடி டிவி, ஆந்திரா பதிவெண் கொண்ட பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்