என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
மதுரையில் ஆட்டோவில் பேட்டரிகள் திருடியவர் கைது
மதுரை:
மதுரை நகரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோரை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார்.
இதன்படி தெற்கு துணை கமிஷனர் தங்க துரை உத்தரவின் பேரில் திலகர் திடல் உதவி கமிஷனர் பழனிகுமார் மேற்பார்வையில் கரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் அந்தந்தப் பகுதிகளில் ரோந்து சென்று வருகின்றனர்.
ஆரப்பாளையம் கண்மாய்க்கரையை சேர்ந்தவர் ஆனந்த் (30), ஆட்டோ டிரைவர். இவர் வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்தி இருந்தார். மர்ம நபர் ஆட்டோவில் இருந்த 2 பேட்டரிகளை திருடுவது தெரியவந்தது.
இதனை தற்செயலாக கவனித்த ஆனந்த், ‘திருடன், திருடன்’ என்று கூச்சல் போட்டார். அந்த பகுதிக்கு தனிப்படை போலீஸ் தற்செயலாக ரோந்து சென்றது.
ஆனந்தின் அலறல் சத்தம் கேட்டதும் தனிப்படை போலீசார் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து கரிமேடு போலீஸ் நிலையத்தில் விசாரித்தனர்.
முதல் கட்ட விசாரணையில் அவர் ஞானஒளிவுபுரம் விசுவாசபுரி தெருவை சேர்ந்த செல்வம் (47) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்