search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல்: அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு அமைப்பு

    புதுச்சேரியில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சி தேர்தல்கள் அடுத்த மாதம் (அக்டோபர்) 21, 25, 28 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.
    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    புதுச்சேரியில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சி தேர்தல்கள் அடுத்த மாதம் (அக்டோபர்) 21, 25, 28 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது.

    இதை முன்னிட்டு அ.தி.மு.க.வின் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களை தேர்வு செய்யவும், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்களை தேர்வு செய்யவும் அ.தி.மு.க.வின் சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெறும் வகையில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகவும் புதுச்சேரி மாநில தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் விவரம் வருமாறு:-

    1. அ.தி.மு.க. அமைப்புச்செயலாளர், முன்னாள் அமைச்சர் செ.செம்மலை.

    2. மதுரை மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.

    3. கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத்.

    4. புதுச்சேரி மாநில (கிழக்கு) மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன்.

    5. புதுச்சேரி மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர்.

    6. காரைக்கால் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.ஓமலிங்கம்.

    அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களோடு, புதுச்சேரி மாநிலம் (கிழக்கு), புதுச்சேரி (மேற்கு) மற்றும் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி. மு.க. நிர்வாகிகளும், உடன் பிறப்புகளும் இணைந்து அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்படும் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிடும் வகையில் சிறந்த முறையில் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
    Next Story
    ×