என் மலர்
செய்திகள்

தற்கொலை
தேன்கனிக்கோட்டை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தேன்கனிக்கோட்டை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே பெட்டமுகிலாளம் பக்கமுள்ள கொல்லகொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் பைரன். இவரது மனைவி மதி (வயது45). கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்தது. இதனால் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு மதி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். இந்த நிலையில் மன வருத்தத்தில் காணப்பட்ட மதி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






