என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மூலக்குளம் அருகே கார் டிரைவர் தற்கொலை
புதுச்சேரி:
புதுவை மூலக்குளம் மோதிலால்நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சாதிக்பாஷா. இவர் திலாஸ்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.
இவரது மகன் பீர்முகமது (வயது26). இவர் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கும் சேலத்தை சேர்ந்த ஆஜராபேகம் என்ற பெண்ணுக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
இதற்கிடையே பீர்முகமதுவின் மனைவி தனது சகோதரர் திருமணத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்துக்கு சென்று அங்கேயே தங்கியிருந்து வந்தார்.
இந்த நிலையில் திருமணம் முடிந்து 10 மாதங்கள் ஆகியும் மனைவி கர்ப்பம் அடையாததால் பீர்முகமது மன வருத்தத்தில் இருந்து வந்தார். அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி வந்தனர்.
ஆனாலும் பீர்முகமது விரக்தியுடன் காணப்பட்டு வந்தார். நேற்று மதியம் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த பீர்முகமதுவை அவரது தாயார் சாப்பிட அழைத்தார். ஆனால் தனக்கு பசியில்லை என்று கூறிவிட்டு தூங்க செல்வதாக மாடி படிக்கட்டில் ஏறி செல்ல முயன்றார்.
அப்போது திடீரென பீர்முகமது மயங்கி சாய்ந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக பீர்முகமதுவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பீர்முகமது இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தை இல்லாத ஏக்கத்தில் பீர்முகமது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து அவரது தந்தை சாதிக்பாஷா கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்