என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேவகோட்டையில் குப்பை கிடங்கில் தீடீர் தீ விபத்து- புகை முட்டத்தால் பொதுமக்கள் அவதி
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம்நகர் பவர்ஹவுஸ் அருகில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது.
நகராட்சியில் சேகரிக்கப்படும் அனைத்து விதமான குப்பைகள் இங்கு கொட்டப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் எப்போதும் துர்நாற்றம் வீசும். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் யாரோ குப்பை கிடங்கில் தீ வைத்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் தீ குப்பைகளில் பரவி மளமளவென எரிந்தது. இதனால் அந்த பகுதியே புகை மூட்டமானது.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தால் ஏற்பட்ட கரும்புகை காரணமாக அப்பகுதியில் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
தூர்நாற்றம், நோய்பரவல் உள்ளிட்ட காரணங்களால் குப்பை கிடங்கை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்