என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூரண மதுவிலக்கு பற்றி ஆட்சிக்கு வந்தபின் முடிவெடுப்போம்- ஆ.ராசா பேட்டி
Byமாலை மலர்21 March 2021 2:28 PM GMT (Updated: 21 March 2021 2:28 PM GMT)
இலவச கியாஸ் சிலிண்டர் கொடுக்கிறோம். மாதம் 1,500 ரூபாய் உதவி தொகை கொடுக்கிறோம் என்பவர்கள் ஆட்சியில் இருக்கும்போது ஏன் கொடுக்கவில்லை? என்று ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
புஞ்சைபுளியம்பட்டி:
பவானிசாகர் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் பி.எல்.சுந்தரம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முன்னாள் மத்திய மந்திரியும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா நேற்று புஞ்சைபுளியம்பட்டியில் பிரசாரம் செய்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என தேர்தல் அறிக்கையில் நாங்கள் கூறியதால் பயந்து போய் அ.தி.மு.க.வினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கிறார்கள். பூரண மதுவிலக்கு குறித்து தேர்தல் அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என அவசியமில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் முடிவெடுப்போம்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நோட்டாவிற்கு வாக்களிப்பது என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் பேசி இப்பிரச்சனைக்கு தீர்வு காண்போம்.
இலவச கியாஸ் சிலிண்டர் கொடுக்கிறோம். மாதம் 1,500 ரூபாய் உதவி தொகை கொடுக்கிறோம் என்பவர்கள் ஆட்சியில் இருக்கும்போது ஏன் கொடுக்கவில்லை?
இவ்வாறு அவர் கூறினார்.
பவானிசாகர் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் பி.எல்.சுந்தரம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முன்னாள் மத்திய மந்திரியும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா நேற்று புஞ்சைபுளியம்பட்டியில் பிரசாரம் செய்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என தேர்தல் அறிக்கையில் நாங்கள் கூறியதால் பயந்து போய் அ.தி.மு.க.வினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கிறார்கள். பூரண மதுவிலக்கு குறித்து தேர்தல் அறிக்கையில் குறிப்பிட வேண்டும் என அவசியமில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் முடிவெடுப்போம்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நோட்டாவிற்கு வாக்களிப்பது என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் பேசி இப்பிரச்சனைக்கு தீர்வு காண்போம்.
இலவச கியாஸ் சிலிண்டர் கொடுக்கிறோம். மாதம் 1,500 ரூபாய் உதவி தொகை கொடுக்கிறோம் என்பவர்கள் ஆட்சியில் இருக்கும்போது ஏன் கொடுக்கவில்லை?
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X