search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    ஆரணி அருகே டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி

    ஆரணி அருகே டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணியை அடுத்த பெரியண்ணநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 50), விவசாயி. இவர், வரப்பில் டிராக்டரை ஓட்டிச்செல்லும் போது திடீரென டிராக்டர் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் தரணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த குமாருக்கு ஆனந்தி என்ற மனைவியும், அருண், சங்கர், ரமேஷ்குமார் என 3 மகன்களும் உள்ளனர்.
    Next Story
    ×