என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கலசப்பாக்கம் அருகே டெய்லர் அடித்துக் கொலை- அதிமுக நிர்வாகி உட்பட 3 பேர் கைது
கலசப்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சிறுகிளாம்பாடியை சேர்ந்த கோபால் மகன் துரைக்கண்ணு (வயது 44). டெய்லர்.
இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் துரை என்பவருக்கும் 2 சென்ட் நிலம் வாங்குவது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு துரைக்கண்ணுக்கும், துரைக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது வாக்குவாதம் அதிகரித்து ஆத்திரமடைந்த துரை அவரது மனைவி தீபா மற்றும் அப்பா முனுசாமி ஆகியோர் துரைக்கண்ணுவை உருட்டு கட்டையால் தாக்கி கத்தியால் தலையில் வெட்டினர்.
இதில் படுகாயமடைந்த துரைக்கண்ணன் மயங்கி கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள்அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் நேற்று மாலை துரைக்கண்னு பரிதாபமாக இறந்தார்.
இது சம்பந்தமாக கலசபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து அ.தி.மு.க. கிளை செயலாளர் துரை மற்றும் அவரது மனைவி தீபா, அப்பா முனுசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்