என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவண்ணாமலை அருகே மின்சாரம் தாக்கி போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் பலி
Byமாலை மலர்15 Jan 2021 2:22 AM GMT (Updated: 15 Jan 2021 2:22 AM GMT)
திருவண்ணாமலை அருகே மின்சாரம் தாக்கி போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடுத்த அடிஅண்ணாமலை பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 25). அதேப் பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்தார். இந்த நிலையில் அவர் தனது கடையின் பெயர் பலகையை புதுப்பிப்பதற்காக அதை கடையின் மீது ஏறி கழட்டியுள்ளார். அப்போது அவருடன் அதே பகுதியில் 2 பேர் இருந்து உள்ளனர். பெயர் பலகை கழட்டும் போது எதிர்பாரத வீதமாக கடைக்கு மேல் சென்ற மின்சார வயர் உரசியதில் மின்சாரம் பாய்ந்து லோகநாதன் உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் லோகநாதன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். மற்ற 2 பேரும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X