search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை பயிற்சி முகாம்

    மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை பயிற்சி முகாம் நடந்தது.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை பயிற்சி முகாம் நடந்தது. முகாமுக்கு குடிமுறை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) வீரசோழன் தலைமை தாங்கினார். பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு குறித்து விளக்கி் பேசினார். தொடர்ந்து தடுப்பூசி போடுவதற்கு முன்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்குதல், தடுப்பூசி போடும் முறை, தடுப்பூசி போட்ட பின்னர் அரைமணி நேரம் ஓயவு எடுக்க சொல்லுதல் ஆகியவை குறித்து செவிலியர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதில் மாவட்ட கொரோனா மருத்துவ பயிற்சியாளர்கள் ராகவன், அருண்பிரசாத், திட்ட அலுவலர் வீரச்செல்வன் மற்றும் செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×