என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
முதுமலையில் காட்டு யானையின் கண்களில் ஒளிபாய்ச்சி மிரட்டிய 2 பேர் கைது
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முதுமலை சீகூர் வனப்பகுதியில் சிறுத்தை, புலி, மான், காட்டெருமை, யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் மசினகுடியை சேர்ந்த சஜின் (வயது 26) என்பவர் சம்பவத்தன்று இரவு ஜீப்பில் தனது நண்பருடன் சென்றார்.
வனப்பகுதியில் வந்தபோது சுஜின் அங்கு வந்து யானை மற்றும் வனவிலங்குகளின் கண்களில் ஜிப்பின் முகப்பு விளக்கில் ஒளியை பாய்ச்சினார். இதில் யானை மற்றும் வனவிலங்குகள் மிரண்டு அங்குமிங்கும் ஓடின. இதனை உடன் சென்ற நண்பர் வீடியோ எடுத்தார். வனவிலங்குகள் பதறி ஓட்டம் பிடித்த காட்சிகளை வாட்ஸ் அப் மூலம் தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார். பின்னர் இது சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்ததும் சுஜின் மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர். ஹெட்லைட்டை பயன்படுத்தி யானை உள்ளிட்ட வனவிலங்குகளை மிரட்டிய சுஜினுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அவரது நண்பர் கடுமையான எச்சரிக்கைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்