என் மலர்

    செய்திகள்

    கைது
    X
    கைது

    முதுமலையில் காட்டு யானையின் கண்களில் ஒளிபாய்ச்சி மிரட்டிய 2 பேர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    முதுமலையில் காட்டுயானையின் கண்களில் ஒளிபாய்ச்சி மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை சீகூர் வனப்பகுதியில் சிறுத்தை, புலி, மான், காட்டெருமை, யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் மசினகுடியை சேர்ந்த சஜின் (வயது 26) என்பவர் சம்பவத்தன்று இரவு ஜீப்பில் தனது நண்பருடன் சென்றார்.

    வனப்பகுதியில் வந்தபோது சுஜின் அங்கு வந்து யானை மற்றும் வனவிலங்குகளின் கண்களில் ஜிப்பின் முகப்பு விளக்கில் ஒளியை பாய்ச்சினார். இதில் யானை மற்றும் வனவிலங்குகள் மிரண்டு அங்குமிங்கும் ஓடின. இதனை உடன் சென்ற நண்பர் வீடியோ எடுத்தார். வனவிலங்குகள் பதறி ஓட்டம் பிடித்த காட்சிகளை வாட்ஸ் அப் மூலம் தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார். பின்னர் இது சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்ததும் சுஜின் மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர். ஹெட்லைட்டை பயன்படுத்தி யானை உள்ளிட்ட வனவிலங்குகளை மிரட்டிய சுஜினுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அவரது நண்பர் கடுமையான எச்சரிக்கைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

    Next Story
    ×