என் மலர்tooltip icon

    செய்திகள்

    எச்.ராஜா
    X
    எச்.ராஜா

    பா.ஜ.க. தயவு இல்லாமல் தமிழகத்தில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது- எச்.ராஜா பேட்டி

    பா.ஜ.க. இல்லாமல் அடுத்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

    புதுக்கோட்டை:


    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் பா.ஜ.க. எழுச்சி அடைந்து வருகிறது. மத்திய அரசுக்கு எதிராக கடந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் கட்ட மைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது மக்கள் அந்த தகிடு தத்தங்களை புரிந்து கொண்டு விட்டனர்.

    விவசாயிகளுக்கு கிசான் திட்டத்தின் மூலமாக நேரடியாக உதவிகளை வழங்கி வரும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது வேதனைக்குரியது. இதில் ஈடுபட்ட அனைவரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும்.

    தி.மு.க. பொய் பித்தலாட்டத்தை கட்டமைத்து தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மொழி ரீதியான பன்முகத்தன்மையை எதற்காக தி.மு.க. எதிர்க்கிறது. மொழி ரீதியாக பிளவுப்படுத்துவது தேச துரோகம். அதை தி.மு.க. செய்கிறது. தி.மு.க. தமிழ் விரோதி. தமிழனுக்கு விரோதி. தேசியம்தான் பாஜவின் இலக்கு.

    மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்கிறது. தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து முடிவு செய்ய முடியும். தமிழகத்தில் ஆட்சி அமைவதில் ஒரு தவிர்க்க முடியாத கட்சியாக பா.ஜ.க. உள்ளது. எந்த கூட்டணி அமைத்தாலும் பா.ஜ.க. இல்லாமல் அடுத்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.

    தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும். நீட் தேர்வை புறக்கணிப்பது என்பது மாணவர்களின் முன்னேற்றத்துக்கான முட்டுக்கட்டை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×