என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஞ்சிபுரம் அருகே மதுபாட்டில்கள் கடத்தல்- 2 பேர் கைது
Byமாலை மலர்1 July 2020 9:01 AM GMT (Updated: 1 July 2020 9:01 AM GMT)
காஞ்சிபுரம் அருகே மதுபாட்டில்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தை அடுத்த ஊத்துக்காடு ஜங்சனில் இருந்து வெங்கச்சேரி வழியாக, ஒரு காரில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக காஞ்சிபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலைக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி, சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் போலீசாருடன் அந்த இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது, ஒரு கார் வேகமாக வந்தது. அந்த காரை சோதனை செய்தபோது அதில் 192 மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காவாந்தண்டலைத்தை சேர்ந்த கார் டிரைவரான குமரன் (வயது 20) மற்றும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பரான விஜயகுமார் (28) ஆகியோரை கைது செய்தனர். காரையும், மதுபாட்டில்களையும் கைப்பற்றினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X