என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆன்-லைன் ரம்மி சூதாட்டத்தை தடைசெய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
Byமாலை மலர்18 Jun 2020 3:22 AM GMT (Updated: 18 Jun 2020 3:22 AM GMT)
புதிய விதிகளை உருவாக்கியோ, ஏற்கெனவே உள்ள விதிகளின் படியோ ஆன்-லைன் ரம்மி சூதாட்டத்தை உடனடியாக தடைசெய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை :
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
17 ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தில் தலைவிரித்தாடிய பரிசுச்சீட்டு கலாசாரத்தால் லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தன. பா.ம.க. தான் தொடர்ச்சியான போராட்டங்களால் அந்த கலாசாரத்திற்கு முடிவுகட்டியது. அதேபோல், இப்போது ஆன்-லைன் சூதாட்டங்களுக்கும் முடிவு கட்டப்படவேண்டும். இல்லாவிட்டால் இளைஞர் சமுதாயத்தை சீரழிவில் இருந்து காப்பாற்றமுடியாது.
சூதாட்டங்கள் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றின்போது, ‘ஆன்-லைன் ரம்மி சூதாட்டமா? என்ற வினாவே எழவில்லை’ என்று சுப்ரீம் கோர்ட்டு கூறிவிட்டது. அதை பயன்படுத்திக்கொண்டு அனைத்து ஆன்-லைன் சூதாட்ட நிறுவனங்களும் ஒவ்வொருநாளும் கோடிக்கணக்கான இளைஞர்களை நடுத்தெருவுக்கு கொண்டுவருகின்றன.எனவே, புதியவிதிகளை உருவாக்கியோ, ஏற்கெனவே உள்ள விதிகளின்படியோ ஆன்-லைன் ரம்மி சூதாட்டத்தை உடனடியாக தடைசெய்ய மத்தியமாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
17 ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தில் தலைவிரித்தாடிய பரிசுச்சீட்டு கலாசாரத்தால் லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தன. பா.ம.க. தான் தொடர்ச்சியான போராட்டங்களால் அந்த கலாசாரத்திற்கு முடிவுகட்டியது. அதேபோல், இப்போது ஆன்-லைன் சூதாட்டங்களுக்கும் முடிவு கட்டப்படவேண்டும். இல்லாவிட்டால் இளைஞர் சமுதாயத்தை சீரழிவில் இருந்து காப்பாற்றமுடியாது.
சூதாட்டங்கள் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றின்போது, ‘ஆன்-லைன் ரம்மி சூதாட்டமா? என்ற வினாவே எழவில்லை’ என்று சுப்ரீம் கோர்ட்டு கூறிவிட்டது. அதை பயன்படுத்திக்கொண்டு அனைத்து ஆன்-லைன் சூதாட்ட நிறுவனங்களும் ஒவ்வொருநாளும் கோடிக்கணக்கான இளைஞர்களை நடுத்தெருவுக்கு கொண்டுவருகின்றன.எனவே, புதியவிதிகளை உருவாக்கியோ, ஏற்கெனவே உள்ள விதிகளின்படியோ ஆன்-லைன் ரம்மி சூதாட்டத்தை உடனடியாக தடைசெய்ய மத்தியமாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X