என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கல்லூரி மாணவி- இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை
Byமாலை மலர்30 May 2020 3:50 PM GMT (Updated: 30 May 2020 3:50 PM GMT)
கடலூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி, இளம்பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூர் நெத்தனாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிகாமணி. இவரது மகள் அன்னலட்சுமி (வயது 20). இவர் வடலூரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அன்ன லட்சுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
உடனே அவரது பெற்றோர் கடையில் விசாரித்தனர். அதற்கு அவர்கள், உங்கள் மகள் வேலை முடிந்ததும் வீட்டுக்கு கிளம்பி விட்டார் என்று கூறினர்.
இதைத்தொடர்ந்து அன்னலட்சுமியின் பெற்றோர் தங்களது உறவினர்கள் உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.
இது குறித்து அன்ன லட்சுமியின் தாயார் ராஜேஸ்வரி வடலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து அன்னலட்சுமியை யாரேனும் கடத்தி சென்றார்களா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் புவனகிரி வடக்குத்திட்டை முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் சரண்யா (20). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கல்லூரி செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் உறவினர் வீட்டுக்கு சரண்யா சென்றார். வெகு நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை.
இதைத்தொடர்ந்து அவரது பெற்றோர் சரண்யாவை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை.
இது குறித்து புவனகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான சரண்யாவை தேடிவருகின்றனர்.
கடலூர் மாவட்டம் வடலூர் நெத்தனாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிகாமணி. இவரது மகள் அன்னலட்சுமி (வயது 20). இவர் வடலூரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அன்ன லட்சுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
உடனே அவரது பெற்றோர் கடையில் விசாரித்தனர். அதற்கு அவர்கள், உங்கள் மகள் வேலை முடிந்ததும் வீட்டுக்கு கிளம்பி விட்டார் என்று கூறினர்.
இதைத்தொடர்ந்து அன்னலட்சுமியின் பெற்றோர் தங்களது உறவினர்கள் உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.
இது குறித்து அன்ன லட்சுமியின் தாயார் ராஜேஸ்வரி வடலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து அன்னலட்சுமியை யாரேனும் கடத்தி சென்றார்களா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் புவனகிரி வடக்குத்திட்டை முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் சரண்யா (20). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கல்லூரி செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் உறவினர் வீட்டுக்கு சரண்யா சென்றார். வெகு நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை.
இதைத்தொடர்ந்து அவரது பெற்றோர் சரண்யாவை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை.
இது குறித்து புவனகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான சரண்யாவை தேடிவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X