search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    காஞ்சிபுரத்தில் தவறி விழுந்த மூதாட்டி மரணம்

    காஞ்சிபுரத்தில் தவறி விழுந்த மூதாட்டி மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் சடையப்பன், இவரது மனைவி மல்லிகா (வயது 73). நடைபயிற்சி மேற்கொண்டிருந்த மல்லிகா கால் தவறி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மல்லிகா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும், காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×