என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வாணியம்பாடியில் 2 பெண்களிடம் செயின் பறிப்பு
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி பூபதி தெருவை சேர்ந்த ஜெயராமனின் மனைவி அம்சா (55). அவர் நேற்று பிற்பகல் 2 மணிக்கு பச்சூர் அருகே உள்ள விவசாய நிலத்துக்குக்கு சென்று கொண்டிருந்தார்.
சொரக்காயல்நத்தம் சாலையில் நடந்து சென்றபோது பைக்கில் வந்த இரு நபர்களில் ஒருவர் பின் தொடர்ந்து வந்து அம்சாவிடம் வழி கேட்டார். திடீரென அம்சா கழுத்தில் அணிந்திருந்த தாலிச் செயின், கால் காசு உள்ளிட்ட 6 பவுன் தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு மற்றொரு நபருடன் பைக்கில் தப்பிச் சென்றார்.
இது தொடர்பாக அம்சா, நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
நாட்டறம்பள்ளியை அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி சுண்ணாம்புக் குட்டை பகுதியை சேர்ந்த நாகராஜின் மனைவி ராஜேஸ்வரி (48). நாட்டறம் பள்ளிபுதுப்பேட்டை சாலையில் கொட்டாவூர் பஸ் நிறுத்தத்தில் நேற்று பிற்பகல் நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் ராஜேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இது தொடர்பாக ராஜேஸ்வரி, நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த இரு புகார்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், நகைப்பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்