search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஹெல்மெட், அணிந்து வாகனம் ஓட்டியவர்களுக்கு இனிப்பு வழங்கிய போலீசார்

    மஞ்சூர் பகுதியில் ஹெல்மெட், சீட்பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டியவர்களுக்கு போலீசார் இனிப்பு வழங்கி பாராட்டினர்.
    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் விபத்துகளை முற்றிலும் தவிர்க்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகள், வாகன ஓட்டுனர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இது ஒருபுறம் இருக்க இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமலும், கார் உள்ளிட்ட வாகனங்களில் சீட்பெல்ட் அணியாமல் செல்பவர்களை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். மஞ்சூர் பஜார், மின்வாரிய பிரிவு, கரியமலை பிரிவு உள்பட பல்வேறு பகுதிகளிலும் போலீசார் அடிக்கடி வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் மஞ்சூர் எஸ்.ஐ.ராஜ்குமார் தலைமையிலான போலீசார் மஞ்சூர் பஜார் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிந்து சென்ற வாகன ஓட்டுனர்களை நிறுத்தி அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டினர்.

    அதே சமயம் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் மற்றும் கார்களில் சீட்பெல்ட் அணியாமல் சென்றவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்கப்பட்டது.
    Next Story
    ×