search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மாணவி, இளம்பெண் பலாத்காரம்: போக்சோவில் கைதான 3 பேர் சிறையில் அடைப்பு

    நீலகிரியில் மாணவி, இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் போக்சோவில் கைதான 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி அருகே உள்ள தும்பிமலையை சேர்ந்தவர் முரளி(வயது26). இவரது நண்பர் ஒசக்கேரியை சேர்ந்த கோகுல்ராஜ்(28).

    சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் காரில் சோலூர் மட்டம் வழியாக சென்றனர். அப்போது அந்த வழியாக 15 வயது மாணவி ஒருவர் தனியாக பள்ளிக்கு நடந்து சென்றார்.

    இதையடுத்து கோகுல்ராஜ் காரை நிறுத்தி அந்த மாணவியிடம் நைசாக பேச்சு கொடுத்தனர்.

    பின்னர் அவரை வாயை பொத்தி காரில் கடத்தி கோவைக்கு அழைத்து வந்தனர். வரும் வழியில் காருக்குள் வைத்து 2 பேரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர்.

    கோவை வந்ததும் ஒரு தங்கும் விடுதிக்கு மாணவியை மிரட்டி அழைத்து சென்றனர். பின்னர் அங்கு இரவு முழுவதும் அந்த மாணவியை மிரட்டி 2 பேரும் பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் மறுநாள் காலை மாணவியை காரில் சோலூர் மட்டத்திற்கு அழைத்து சென்று இறக்கி விட்டு விட்டு தப்பி சென்றனர்.

    இதையடுத்து வீட்டிற்கு வந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் சம்பவம் குறித்து சோலூர்மட்டம் போலீசில் புகார் கொடுத்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மாணவியை கடத்திய முரளி மற்றும் கோகுல்ராஜை பிடித்து குன்னூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

    மற்றொரு சம்பவம்...

    கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த தம்பதிக்கு 20 வயதில் மகள் உள்ளார். சம்பவத்தன்று இந்த பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மருதாசலம்(35) என்பவர் வீட்டிற்குள் நுழைந்து தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

    இதனால் அதிர்ச்சியான அப்பெண் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். பொதுமக்கள் வந்ததை பார்த்ததும் அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி தப்பி செல்ல முயன்றார். ஆனால் பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து அன்னூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து போலீசார் மருதாசலம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மருதாசலத்தை கைது செய்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


    Next Story
    ×