search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மத்தூர் அருகே தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது

    மத்தூர் அருகே முன்விரோத தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்துள்ள அங்கம்பட்டி செவத்தான்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மாதப்பன் (வயது45). இவருக்கும் இவரது அண்ணன் மகன் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி (28) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இதனால் நேற்று மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோவிந்தசாமி கத்தியால் மாதப்பனை சரமாரியாக குத்தியுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் படுகாயம் அடைந்த மாதப்பனை மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

    இது குறித்து அவர் மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் தொழிலாளியை தாக்கியதாக  கோவிந்தசாமியை கைது செய்தனர். கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×