search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    மறைமலைநகரில் கணவர் மது குடித்து விட்டு வந்ததால் பெண் தற்கொலை

    மறைமலைநகரில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வி (வயது 38). நேற்று முன்தினம் இவரது கணவர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால், கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த செல்வி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இது குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×