என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா
ஈரோடு:
ஈரோடு வீரப்பன் சத்திரம் சின்னவலசு என்கிற சுக்கிரமணிய கவுண்டர் வலசு மகா மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கடந்த 31-ந் தேதி இரவு 7 மணிக்கு பூச்சாட்டுடன் தொடங்கி நடந்து வருகிறது. அன்று இரவு கம்பம் நடும் விழாவும் நடந்தது, இதையொட்டி கம்பத்திற்கு பக்தர்கள் குறிப்பாக பெண்கள் புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.
இரவு (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 7-ந் தேதி பக்தர்கள் காவேரி சென்று தீர்த்தம் மற்றும் கரகம் எடுத்து வருகிறார்கள்.
மறுநாள் (8-ந் தேதி) காலை பொங்கல் விழா நடக்கிறது. பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபடுகிறார்கள். மாலை 4 மணிக்கு மாவிளக்கு எடுத்து வருகிறார்கள். இரவு 7 மணிக்கு கம்பம் எடுக்கப்படுகிறது. விழாவில் ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
8-ந் தேதி அம்மன் மலர் பல்லக்கில் ஊர்வலம் வரும் நிகழ்ச்சியும் தொடர்ந்து மஞ்சள் நீராட்டும் நடக்கிறது. 10-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்