search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கம்பத்துக்கு பக்தர்கள் புனிதநீர் ஊற்றிய காட்சி.
    X
    கம்பத்துக்கு பக்தர்கள் புனிதநீர் ஊற்றிய காட்சி.

    வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

    ஈரோடு வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நடந்தது. இதில் பக்தர்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டு செல்கிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன் சத்திரம் சின்னவலசு என்கிற சுக்கிரமணிய கவுண்டர் வலசு மகா மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கடந்த 31-ந் தேதி இரவு 7 மணிக்கு பூச்சாட்டுடன் தொடங்கி நடந்து வருகிறது. அன்று இரவு கம்பம் நடும் விழாவும் நடந்தது, இதையொட்டி கம்பத்திற்கு பக்தர்கள் குறிப்பாக பெண்கள் புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டு செல்கிறார்கள்.

    இரவு (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 7-ந் தேதி பக்தர்கள் காவேரி சென்று தீர்த்தம் மற்றும் கரகம் எடுத்து வருகிறார்கள்.

    மறுநாள் (8-ந் தேதி) காலை பொங்கல் விழா நடக்கிறது. பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபடுகிறார்கள். மாலை 4 மணிக்கு மாவிளக்கு எடுத்து வருகிறார்கள். இரவு 7 மணிக்கு கம்பம் எடுக்கப்படுகிறது. விழாவில் ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    8-ந் தேதி அம்மன் மலர் பல்லக்கில் ஊர்வலம் வரும் நிகழ்ச்சியும் தொடர்ந்து மஞ்சள் நீராட்டும் நடக்கிறது. 10-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது. 

    Next Story
    ×