என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருந்துறை அருகே உள்ள அரசு பள்ளியில் ஓட்டுபோட ஆர்வத்துடன் காத்திருந்த வாக்காளர்கள்
    X
    பெருந்துறை அருகே உள்ள அரசு பள்ளியில் ஓட்டுபோட ஆர்வத்துடன் காத்திருந்த வாக்காளர்கள்

    ஈரோடு மாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் ஆர்வத்துடன் ஓட்டு போட்ட வாக்காளர்கள்

    பெருந்துறை, சென்னிமலை, பவானி, அந்தியூர் உள்பட ஈரோடு மாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டு போட்டனர்.
    ஈரோடு:

    தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 183 வார்டுகள் ,225 கிராம ஊராட்சி தலைவர்கள் ,2097 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் 19 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள் உள்ளன.

    இதில் முதல் கட்டமாக ஈரோடு, கோபி கொடுமுடி, மொடக்குறிச்சி, நம்பியூர் தாளவாடி, டி.என்.பாளையம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 894 கிராம ஊராட்சி வார்டுகளுக்கும், 95 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளும் 79 ஊராட்சி ஒன்றியக் குழு வார்டுகளுக்கும், 8 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்து விட்டது.

    இதையடுத்து 2-ம் கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை, அந்தியூர், பவானி, பவானி சாகர், சென்னி மலை ,பெருந்துறை, சத்தியமங்கலம் ஆகிய ஏழு ஊராட்சிக்கு உட்பட்ட 1203 கிராம ஊராட்சி வார்டுகளுக்கும் 126 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும் 104 ஊராட்சி ஒன்றிய குழு வார்டுகளுக்கும், 11 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்காக மொத்தம் 919 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன .

    அம்மாபேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 85 ஆயிரத்து 377 பேரும் அந்தியூர் ஒன்றியத்தில் 88 ஆயிரத்து 960 பேரும், பவானி ஒன்றியத்தில் 87 ஆயிரத்து 194 பேரும், பவானிசாகர் ஒன்றியத்தில் 63 ஆயிரத்து 895 பேரும் சென்னிமலை ஒன்றியத்தில் 78 ஆயிரத்து 227 பேரும், பெருந்துறை ஒன்றியத்தில் 65 ஆயிரத்து 100 பேரும், சத்தியமங்கலம் ஒன்றியத்தில் 74 ஆயிரத்து 146 பேரும் என ஏழு ஒன்றியங்களிலும் சேர்த்து மொத்தம் 5 லட்சத்து 42 ஆயிரத்து 899 பேர் வாக்களித்து வருகின்றனர்.

    இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது கடும் பனிப்பொழிவு பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர் அந்தியூர் பவானி சத்தியமங்கலம் உள்பட ஒன்றியங்களில் ஏராளமான மலைப்பகுதிகளில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இங்கும் மக்கள் குறிப்பாக பெண்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். வயதான முதியவர்களும் நீண்ட வரிசை நின்றது தனது ஜனநாயக கடமைகளை ஆற்றி வருகின்றனர் இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலில் மொத்தம் 170 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த வாக்குச்சாவடி மையங்களில் வெப் குழுக்கள் வீடியோ குழுக்கள் நுன்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இன்று இரண்டாம் கட்டமாக மொத்தம் 6750 தேர்தல் அலுவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் பதட்டமான வாக்குச்சாவடிகளில் 61 நுண்பார்வையாளர்கள் 49 வெப்கேமராக்கள் 80 இடங்களில் வீடியோக்கள் மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    Next Story
    ×