என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாளை நினைவு நாள்: ஜெயலலிதா படத்துக்கு அ.தி.மு.க.வினர் மலர் தூவி மரியாதை-அன்னதானம்
Byமாலை மலர்4 Dec 2019 10:13 AM GMT (Updated: 4 Dec 2019 10:13 AM GMT)
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு தினம் நாளை (5-ந் தேதி) அனுஷ்டிக்கப்படுகிறது. அவரது திருவுருவப்படத்துக்கு அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.
மதுரை:
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1 1/2 கோடி கழக தொண்டர்களின் இதய தெய்வமாக விளங்கி வரும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு தினம் நாளை (5-ந் தேதி) அனுஷ்டிக்கப்படுகிறது.
இதையொட்டி மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றியம், நகரம், பேரூர், வார்டு பகுதிகளில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு புகழ் அஞ்சலி செலுத்தப்படும் வகையில் அவரது திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது.
ஒன்றியம், நகரப் பகுதிகளில் அ.தி.மு.க. வினர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்று தங்களது இதய அஞ்சலியை சமர்ப்பிக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X