என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்தியமங்கலம் அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
Byமாலை மலர்23 Nov 2019 5:32 PM GMT (Updated: 23 Nov 2019 5:32 PM GMT)
சத்தியமங்கலம் அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு:
சத்தியமங்கலம் அருகே கொட்டு வீராம்பாளையம் அடுத்த தேவாங்குபுரம் என்ற ஊர் உள்ளது. இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் உள்ள குடியிருப்பு அருகே செல்போன் கோபுரம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் முதலமைச்சருக்கும், கலெக்டர் தாசில்தார் ஆகியோருக்கும் தனித் தனியாக மனு அளித்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு மீண்டும் இந்தப்பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு ஜெனரேட்டர் பொருத்தப்பட்டது. இதனை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் இன்று காலை 11. 30 மணி அளவில் சக்தி- பண்ணாரி செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டார்.
அப்போது உங்கள் பகுதிகளில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெறாது என்று உறுதி அளித்தார். இதனை ஏற்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சுமார் 30 நிமிடம் நடந்து வந்த சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.
சத்தியமங்கலம் அருகே கொட்டு வீராம்பாளையம் அடுத்த தேவாங்குபுரம் என்ற ஊர் உள்ளது. இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் உள்ள குடியிருப்பு அருகே செல்போன் கோபுரம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் முதலமைச்சருக்கும், கலெக்டர் தாசில்தார் ஆகியோருக்கும் தனித் தனியாக மனு அளித்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு மீண்டும் இந்தப்பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு ஜெனரேட்டர் பொருத்தப்பட்டது. இதனை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் இன்று காலை 11. 30 மணி அளவில் சக்தி- பண்ணாரி செல்லும் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டார்.
அப்போது உங்கள் பகுதிகளில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெறாது என்று உறுதி அளித்தார். இதனை ஏற்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சுமார் 30 நிமிடம் நடந்து வந்த சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X