என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காயத்ரி ரகுராம் உருவப்படத்தை எரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
Byமாலை மலர்19 Nov 2019 9:41 AM GMT (Updated: 19 Nov 2019 9:41 AM GMT)
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை அவதூறாக காயத்ரி ரகுராம் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து அக்கட்சியினர் விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி.யை அவதூறாக காயத்ரி ரகுராம் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் ஒன்று திரண்டனர். பின்னர் காயத்ரி ரகுராமை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தொகுதி செயலாளர் அய்யாயிரம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் சுப்பு ஜோதி, திருஞானம், சந்தோஷ்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் ரவி, மாநில நிர்வாகிகள் ராஜ்குமார், நீதி வள்ளல், மற்றும் மருதையன், அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் காயத்ரி ரகுராமுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அவரது உருவப்படத்தை எரித்து மறியல் செய்தனர். தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் அங்கு விரைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். அதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.
காயத்ரி ரகுராமை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி.யை அவதூறாக காயத்ரி ரகுராம் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் ஒன்று திரண்டனர். பின்னர் காயத்ரி ரகுராமை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தொகுதி செயலாளர் அய்யாயிரம் தலைமை தாங்கினார். நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் சுப்பு ஜோதி, திருஞானம், சந்தோஷ்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் ரவி, மாநில நிர்வாகிகள் ராஜ்குமார், நீதி வள்ளல், மற்றும் மருதையன், அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர் காயத்ரி ரகுராமுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அவரது உருவப்படத்தை எரித்து மறியல் செய்தனர். தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் அங்கு விரைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். அதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.
காயத்ரி ரகுராமை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X