என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் - ரூ.70 ஆயிரம் அபராதம் வசூல்
Byமாலை மலர்13 Nov 2019 10:09 AM GMT (Updated: 13 Nov 2019 10:09 AM GMT)
நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரூ.70 ஆயிரம் வரை அபராதம் விதித்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் உள்ளிட்ட 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் 4 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
இந்த பகுதிகளில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவுரைப்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது, பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்ப்பது, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பான பாட்டில்கள் விற்பனையை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மாவட்டம் முழுவதும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட 34 குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்களையும், 18 கிலோ பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்து ரூ.70 ஆயிரத்து 450 அபராதம் விதிக்கப்பட்டது.
இனிவரும் காலங்களில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் குடிநீர் பாட்டில்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
அதேபோல் பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதையும் தவிர்க்க வேண்டும். சுற்றுலா பயணிகளின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள வாட்டர் ஏ.டி.எம்.,களை பயன்படுத்திட வேண்டும் என்றனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் உள்ளிட்ட 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகள் மற்றும் 4 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
இந்த பகுதிகளில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவுரைப்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது, பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதை தவிர்ப்பது, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பான பாட்டில்கள் விற்பனையை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மாவட்டம் முழுவதும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட 34 குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்களையும், 18 கிலோ பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்து ரூ.70 ஆயிரத்து 450 அபராதம் விதிக்கப்பட்டது.
இனிவரும் காலங்களில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் குடிநீர் பாட்டில்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
அதேபோல் பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதையும் தவிர்க்க வேண்டும். சுற்றுலா பயணிகளின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள வாட்டர் ஏ.டி.எம்.,களை பயன்படுத்திட வேண்டும் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X