என் மலர்
செய்திகள்

கோப்பு படம்
ஆம்பூர் அருகே மூதாட்டி கொலையில் தப்பி ஓடிய வாலிபர் கைது
ஆம்பூர் அருகே மூதாட்டியை கொலை செய்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தப்பி ஓடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மனைவி ராஜம்மாள் (வயது 75). இவர்களுக்கு முருகன் என்ற மகனும் ஜெயலட்சுமி, சாந்தி என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் ஜெயலட்சுமியின் மகள் இந்திராவின் மகன் மோனிஷ் பெங்களூரில் வேலை பார்த்து வந்தார்.
ராஜம்மாளின் கொள்ளு பேரன் மோனிஷ் (வயது 21) மற்றும் பெங்களூரை சேர்ந்த பிரஸ்வால் (20), வினய் ஆகியோர் ராஜம்மாளை மயக்க ஸ்பிரே அடித்து கொலை செய்தனர். மேலும் அவர் வைத்திருந்த ரூ20ஆயிரம் 3½ பவுன் நகையை திருடினர். இது தொடர்பாக மோனிஷ், பிரஸ்வால் ஆகியோரை கைது செய்தனர்.
இதில் வினய் தப்பி ஓடிவிட்டார். 2 பேரை பிடித்து ஆம்பூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
தப்பி ஓடிய வினயை பிடிக்க இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் பெங்களூரில் பதுங்கி இருந்த வினயை கைது செய்தனர்.
ஆம்பூர் அடுத்த கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மனைவி ராஜம்மாள் (வயது 75). இவர்களுக்கு முருகன் என்ற மகனும் ஜெயலட்சுமி, சாந்தி என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் ஜெயலட்சுமியின் மகள் இந்திராவின் மகன் மோனிஷ் பெங்களூரில் வேலை பார்த்து வந்தார்.
ராஜம்மாளின் கொள்ளு பேரன் மோனிஷ் (வயது 21) மற்றும் பெங்களூரை சேர்ந்த பிரஸ்வால் (20), வினய் ஆகியோர் ராஜம்மாளை மயக்க ஸ்பிரே அடித்து கொலை செய்தனர். மேலும் அவர் வைத்திருந்த ரூ20ஆயிரம் 3½ பவுன் நகையை திருடினர். இது தொடர்பாக மோனிஷ், பிரஸ்வால் ஆகியோரை கைது செய்தனர்.
இதில் வினய் தப்பி ஓடிவிட்டார். 2 பேரை பிடித்து ஆம்பூர் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
தப்பி ஓடிய வினயை பிடிக்க இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் பெங்களூரில் பதுங்கி இருந்த வினயை கைது செய்தனர்.
Next Story






