என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் அருகே லாரியில் கடத்திய 32 கிலோ கஞ்சா பறிமுதல்- 3 பேர் கைது
Byமாலை மலர்20 Oct 2019 4:46 PM GMT (Updated: 20 Oct 2019 4:46 PM GMT)
வேலூர் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து திருப்பத்தூரை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவு மற்றும் புலனாய்வு பிரிவு போலீஸ் டி.எஸ்.பி. ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபாலன், முருகேசன் மற்றும் போலீசார் நேற்று இரவு விரிஞ்சிபுரம் மோட்டூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது வேலூரில் இருந்து வந்த மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில் பிளாஸ்டிக் குழாய், ஒயர்களுக்கு இடையே 2 மூட்டையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தனர். அதில் 32 கிலோ கஞ்சா இருந்தன. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவர் திருப்பத்தூர் பொம்மிகுப்பத்தை சேர்ந்த விஜயகுமார் (33), அவரது அண்ணன் முருகன் (40) ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கொத்தவலசா பகுதியில் திருப்பத்தூரை சேர்ந்த இஸ்மாயில் (45) என்பவருக்கு கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து இஸ்மாயில், விஜயகுமார், முருகன் ஆகியோரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X