என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
டி.என்.பாளையம் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி வடக்கு வீதியை சேர்ந்தவர் பாப்பாத்தி என்கிற தவசியம்மாள் (வயது 78). இவரின் கணவரும் முதல் மகனும் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் தற்போது மகன் பகவதி (வயது 60) மற்றும் மகள் ஒருவரும் வெவ்வேறு ஊர்களில் உள்ளனர்.
தனியாக வசிக்கும் தனது வயதான அம்மாவை கவனித்து கொள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்த புஷ்பா என்ற பெண்ணை சம்பளத்திற்கு மகன் பகவதி சேர்த்துள்ளார்.
வயது முதிர்வு காரணமாக தவசியம்மாளுக்கு உடல் ரீதியான பல பிரச்சனைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், வேலையாள் புஷ்பா மளிகை சாமான்கள் வாங்க சென்றுவிட்டு சுமார் அரைமணி நேரம் கழித்த வீடு திரும்பியவர் வீட்டுக்குள் நெருப்பு புகை வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனே அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் பூட்டப்பட்ட கதவை திறந்து பாத்தபோது தவசியம்மாள் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். மண்ணெண்ணெய் கேன் அருகில் கிடந்ததால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக தெரிகிறது.
கோபி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற தவசியம்மாளின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்