என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காஞ்சிபுரம் அருகே பெண் டாக்டரிடம் கத்திமுனையில் நகை கொள்ளை
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம், மளிகை செட்டி பகுதியை சேர்ந்தவர் அஞ்சலி, டாக்டர். இவர் ஸ்ரீபெரும்புதூரில் தனியாக கிளினிக் நடத்தி வருகிறார்.தினமும் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு இரவில் காரில் வீடு திரும்புவது வழக்கம்.
நேற்று இரவு அஞ்சலி பணி முடிந்து காரில் திரும்பி வந்து கொண்டு இருந்தார். காரை டிரைவர் ஒருவர் ஓட்டினார்.
காஞ்சிபுரம் அருகே ராஜகுளம் பகுதியில் சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் திடீரென காரை வழிமறித்தனர்.
அவர்கள் காரின் கண்ணாடியை கத்தியால் அடித்து உடைத்தனர். பின்னர் மர்ம கும்பல் அஞ்சலியை கத்தி முனையில் மிரட்டி அவர் அணிந்திருந்த 25 பவுன் நகையை பறித்து அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொள்ளையில் அஞ்சலியும், கார் டிரைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இது குறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. கலைச்செல்வன், இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. பெண் டாக்டரை வழிமறித்து கத்தி முனையில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்