என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை விபசாரத்தில் தள்ளிய கும்பல்

    ஈரோடு அருகே வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    ஈரோடு:

    மதுரை மாவட்டம் தெல்லூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 29). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் தனது நண்பரை பார்ப்பதற்காக ஈரோடு வந்து விட்டு ஊருக்கு செல்வதற்காக ஈரோடு செட்டிபாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் கருப்பையாவிடம் நைசாக பேசி ஆசைவார்த்தை அள்ளி தெளித்தார். தன்னிடம் அழகிகள் உள்ளனர். பணம் கொடுத்து அவர்களிடம் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வாத்தை கூறினார். ஒரு நாள் முழுவதும் தங்கி செக்ஸ் அனுபவிக்கலாம் என கிளு.. கிளுப்பாக கூறினார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் ஈரோடு தாலுகா போலீசில் இது குறித்து புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈரோடு பூந்துறை ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு ஒரு இளம்பெண் இருந்தார். அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. மேலும் தன்னை வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக அவர் தெரிவித்தார்.

    இதையடுத்து அந்த இளம்பெண்ணை மீட்டு கோவையில் உள்ள பெண்கள் பாதுகாப்பு மையத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    மேலும் ஈரோடு நொச்சிக் காட்டு வலசு பகுதியை சேர்ந்த சித்ரா (37) மற்றும் கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (35) ஆகியோர் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்ததது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு நகர பகுதிகளில் சில வெளியூர் வாசிகள் வாடகைக்கு வீடு எடுத்து இளம்பெண்களை வரவழைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாக பரவலாக புகார்கள் உள்ளது.

    அதிக வாடகைக்கு ஆசைப்பட்டு வீடு வாடகைக்கு விடுபவர்கள் அந்த மாதிரி ஆசாமிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். இவர்கள் உங்களுக்கு தெரியாமலே சொந்தகார பெண் என்று கூறி அழைத்து வந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவார்கள். அப்படி அவர்கள் மீது சந்தேகம் இருப்பின் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் வீடு வாடகைக்கு விடும் போது நன்றாக விசாரித்த பிறகே கொடுங்கள்.

    இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×