search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறை தண்டனை
    X
    சிறை தண்டனை

    சொத்து பிரச்சினையில் தந்தையை கொலை செய்த மகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

    சொத்து பிரச்சினையில் தந்தையை கொலை செய்த மகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா செட்டிபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 65). இவரது மகன் சுயம்புராஜ் என்கிற சோம்புராஜ் (45). பால்ராஜ்க்கும், சோம்புராஜ்க்கும் இடையே குடும்பத்திற்கு பாத்தியப்பட்ட சொத்தை பிரிப்பதில் பிரச்சினை இருந்து வந்து உள்ளது. இதில் சோம்புராஜ் சொத்தை பெண்களுக்கு பிரித்து கொடுக்கக்கூடாது எனக்கூறி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளார்.

    இந்நிலையில் கடந்த 16.11.2014-ம் ஆண்டு வீட்டின் அருகே வைத்து சோம்புராஜ், பால்ராஜை கட்டையால் தாக்கினார். இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் படுகாயமடைந்த பால்ராஜை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பால்ராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தந்தையை கொலை செய்ததாக சோம்புராஜை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டையில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் மாலிக் நேற்று தீர்ப்பு கூறினார். அப்போது சொத்து பிரச்சினையில் தந்தையை கொலை செய்த சோம்புராஜ்க்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு வக்கீலாக தர்மராஜ் ஆஜராகி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×